Saturday, 16 May 2015

மகிழ்வு

நினைத்ததெல்லாமே நடந்தது
கேட்டதெல்லாமே கிடைத்தது
முயன்றதெல்லாமே முடிந்தது.

விரும்பிய கல்வி ,
விரும்பிய வேலை.
அருளுக்கும்  குறைவில்லை
பொருளுக்கும் குறைவில்லை.

எந்த வெற்றிக்கும் வேள்வி இல்லை
தோல்வி என்று  கேள்வியே இல்லை.

உதாசினபடுத்தாத உறவினர்கள்
ஏமாற்றம் தராத நன்பர்கள்
குதறி  எடுக்காத  குடும்பத்தினர்.

எவருக்கு  கிடைக்கும்
இந்த வாழ்வும்,இந்த யோகமும்.
எல்லாமே என் பாக்கியம்!

இந்த  பகல் கனவுகளே
நம் மகிழ்வுக்குத்தானே...