Tuesday, 30 October 2012
Saturday, 20 October 2012
ஏழைக்கு ஏற்ற காலம்
மயிலுக்கு வேண்டுமானால்
மழை பிடிக்கும்
ஏழை எங்களுக்கு
வெயில்தான் பிடிக்கும்.
வீட்டுக்குள்லேயே நனைகின்றோம்
தொப்பலாக,
இந்த மழையிலே
வீடே மிதக்கின்றது கப்பலாக.
எங்கள் குடையே வீடுதான்
அந்த கோடையிலே,
ஆனால் ...
எங்கள் வீட்டுக்கே குடை வேண்டும்
இந்த மழையிலே.
காய்ந்து கிடந்தாலும்
ஓய்ந்து வீட்டுக்கு வந்தால்,
சாய்ந்து கொள்ளவாவது
இடமுண்டு அந்த கோடையிலே.
வீட்டுக்குள்ளே குடைபிடிக்கும்
இந்த மாரி காலத்தைவிட,-
குளித்துவிட்டு வருவதற்குள்
துவைத்து வைத்த
நைந்துபோன எங்கள்
துணி காய்ந்திருக்கும்
அந்த கோடை காலம்தான்
ஏழை எங்களுக்கு ஏற்ற காலம்.
மயிலுக்கு வேண்டுமானால்
மழை பிடிக்கும்
ஏழை எங்களுக்கு
வெயில்தான் பிடிக்கும்.
மயிலுக்கு வேண்டுமானால்
மழை பிடிக்கும்
ஏழை எங்களுக்குவெயில்தான் பிடிக்கும்.
வீட்டுக்குள்லேயே நனைகின்றோம்
தொப்பலாக,
இந்த மழையிலே
வீடே மிதக்கின்றது கப்பலாக.
எங்கள் குடையே வீடுதான்
அந்த கோடையிலே,
ஆனால் ...
எங்கள் வீட்டுக்கே குடை வேண்டும்
இந்த மழையிலே.
காய்ந்து கிடந்தாலும்
ஓய்ந்து வீட்டுக்கு வந்தால்,
சாய்ந்து கொள்ளவாவது
இடமுண்டு அந்த கோடையிலே.
வீட்டுக்குள்ளே குடைபிடிக்கும்
இந்த மாரி காலத்தைவிட,-
குளித்துவிட்டு வருவதற்குள்
துவைத்து வைத்த
நைந்துபோன எங்கள்
துணி காய்ந்திருக்கும்
அந்த கோடை காலம்தான்
ஏழை எங்களுக்கு ஏற்ற காலம்.
மழை பிடிக்கும்
ஏழை எங்களுக்கு
வெயில்தான் பிடிக்கும்.
Labels:
கவிதைகள்
Tuesday, 16 October 2012
சாமியே நீயே சொல்லு
வாழ பிடிக்காதவனுக்கு
சாக வழியிருக்கு,
சாக பிடிக்காதவனுக்கு
வாழ வழியிருக்கா? -
சாமியே நீயே சொல்லு.
விரும்பி பிறக்கவில்லை
என்றாலும் வாழ்கின்றோம்,
விரும்பி சாகவில்லை
என்றாலும் சாகின்றோம்.
ஆனால்..
வாழ்ந்து முடிந்தபின் சாவதா
அன்றி
வாழமுடியாமல் சாவதா? -
சாமியே நீயே சொல்லு.
காற்றும் நீரும், செடியும் பயிரும்,
நிறைந்த பூமி வாழத்தானே? -
அன்றி
சாக புதைக்கவா? -
சாமியே நீயே சொல்லு.
வாழ நிலமில்லாமல், வாழ வழியில்லாமல்
இந்த அகண்ட பூமியிலே பிறப்பெதற்கு?-
சாமியே நீ எதுவுமே சொல்ல வேண்டாம்
படைப்பதையே நிறுத்து.
ஆயிரமாயிரம் கிரகங்கள் இருக்கு,
அதோடு பூமியும் இருந்து தொலைக்கட்டும்-
ஜீவராசியில்லா
மலட்டு கிரகமாய்.
Labels:
கவிதைகள்
Monday, 8 October 2012
காதல்
”நீ தூக்கி எறிந்த
எல்லா பொருள்களையும்
பொறுக்கி எடுத்து பத்திரமாக
வைத்திருக்கும் நான்,-
நீ தூக்கி எறிந்த என்னை மட்டும்
தொலைத்து விடுவேனோ?
காறி உமிழ்ந்தாலும் அது
நீயாகத்தான் இருக்க வேண்டும்.
எட்டி உதைத்தாலும் அது
உன் காலாகத்தான் இருக்க வேண்டும்.
வெட்டி புதைத்தாலும் அது
உனக்காகத்தான் இருக்க வேண்டும்.
ஓடி போடா நாயே - என்று
நீ சொன்னாலும்
உன் காலை நக்கும்
நாயாகத்தான் நானிருப்பேன்” -
என்று சுரனையற்று
வசனம் பேசும்
இந்த இழிநிலைதான்
காதலோ...
அட ...ச்சீ...
”நீ தூக்கி எறிந்த
எல்லா பொருள்களையும்
பொறுக்கி எடுத்து பத்திரமாக
வைத்திருக்கும் நான்,-
நீ தூக்கி எறிந்த என்னை மட்டும்
தொலைத்து விடுவேனோ?
காறி உமிழ்ந்தாலும் அது
நீயாகத்தான் இருக்க வேண்டும்.
எட்டி உதைத்தாலும் அது
உன் காலாகத்தான் இருக்க வேண்டும்.
வெட்டி புதைத்தாலும் அது
உனக்காகத்தான் இருக்க வேண்டும்.
ஓடி போடா நாயே - என்று
நீ சொன்னாலும்
உன் காலை நக்கும்
நாயாகத்தான் நானிருப்பேன்” -
என்று சுரனையற்று
வசனம் பேசும்
இந்த இழிநிலைதான்
காதலோ...
அட ...ச்சீ...
Labels:
கவிதைகள்
Subscribe to:
Posts (Atom)


