
கற்க கசடற...
இன்னாத வைகளை எல்லாம்
எண்ணாதவனாகத்தான்
இருந்தேன்.
அல்லாத சொற்களை எல்லாம்
மெல்லாதவனாகத்தான்
இருந்தேன்.
எரிந்துவிழும் குணங்களை எல்லாம்
தெரிந்து கொள்ளாதவனாகத்தான்
இருந்தேன்.
ஒழுங்கின்மைகளை எல்லாம்
சகித்து கொள்ளாதவனாகத்தான்
இருந்தேன்.
இந்த பொல்லாத வைகளை எல்லாம்
கல்லாதவனாகத்தான்
இருந்தேன்.
இன்னமும் என்னவெல்லாம்
கற்க வேண்டுமோ....இந்த உலகத்தோடு ஒன்றி வாழ.


