ஞானம்
நாங்கள் தொலைந்து போனவர்கள் அல்ல
’தொலைந்து போ’
என்று போகச்சொல்லபட்டவர்கள்.
நாங்கள் ஆண் ஒன்று, பெண் ஒன்று
என்று-,
ஆசைக்கு ஒருத்தியையும்
ஆஸ்திக்கு ஒருத்தனையும் பெற்றவர்கள்.
நாங்கள் ஆசைக்கு பெற்றவள்
எவன்மீதோ ஆசை கொண்டு
ஓடிவிட்டாள்.
ஆஸ்திக்கு பெற்றவன்
ஆஸ்தியை பெற்றுக்கொண்டு
துரத்திவிட்டான்.
காலம் கடந்த தாமதமான
சிந்தனைதான்
ஆனால்.... தவிர்க்கமுடியவில்லை,-
’கருத்தடை செய்துகொண்டுதான்
கல்யாணமே செய்திருக்க வேண்டுமோ’.
நாங்கள் தொலைந்து போனவர்கள் அல்ல
’தொலைந்து போ’
என்று போகச்சொல்லபட்டவர்கள்.என்று-,
ஆசைக்கு ஒருத்தியையும்
ஆஸ்திக்கு ஒருத்தனையும் பெற்றவர்கள்.
நாங்கள் ஆசைக்கு பெற்றவள்
எவன்மீதோ ஆசை கொண்டு
ஓடிவிட்டாள்.
ஆஸ்திக்கு பெற்றவன்
ஆஸ்தியை பெற்றுக்கொண்டு
துரத்திவிட்டான்.
காலம் கடந்த தாமதமான
சிந்தனைதான்
ஆனால்.... தவிர்க்கமுடியவில்லை,-
’கருத்தடை செய்துகொண்டுதான்
கல்யாணமே செய்திருக்க வேண்டுமோ’.