பொய்

நானும் உன்னிடம்
பொய் சொல்லியிருக்கிறேன்
நீயும் என்னிடம்
பொய் சொல்லியிருக்கிறாய்.
காலம்தான் உண்மைகளை
உணர்த்திவிடுமே.-
இருவருமே பொய்களை
அடையாளம் கண்டுவிட்டோம்.
நான் சொன்ன பொய் அனைத்துமே
உன்னை நேசிப்பதற்காக
சொல்லப்பட்டது.
நீ சொன்ன பொய்யில்
பிரதாணமானது
என்னை நேசித்ததாக
சொன்னதே...
.