Tuesday, 30 October 2012

இறைவா...

கடுமொழியையும் சுடுவிழியையும்
கடுகடு முகத்தையும்
நான் காட்டுவதற்கு
பலரையும் எனக்கு காட்டியவனே...

சிரிப்பையும் சிலிர்பையும்
கனிவையும் காதலையும்
நான் காட்டுவதற்கு
எவரேனும் ஒருவரையாவது
அடையாளம் காட்டுவாயோ?