Sunday, 1 September 2013

சொந்தங்களே..

சொந்தங்களே... உங்களுக்கு
என்ன ஆயிற்று.

ஞானம் பிறக்கும்
மரண வீட்டிலும் மண்டையை
உடைத்துக்கொண்டு சண்டை.
மகிழ்வு தவழும்
மண வீட்டிலும் கொண்டையை
பிடித்துக்கொண்டு சண்டை.

பிறப்பிலே தொடங்கி
வாழ்வோடு வளர்ந்து
இறப்பிற்கு பின்னரும்
தொடர்வதுதானே உறவு.

மரமாக இருந்தால்
தோப்போடு  இருக்க வேண்டும்.
காயாக இருந்தால்
குலையோடு  இருக்க வேண்டும்.
மனிதனாக இருந்தால்
குறைந்தபட்சம்
உறவுகளோடு மட்டுமாவது
ஒரு பினைப்போடு இருக்க வேண்டாமா?

வரவு பார்த்து வருவதுவா உறவு..!
விழும் முன்னே விழுதாக
வருவதுவே உறவு.
அழும் முன்னே அணையாக
தடுப்பதுவே உறவு.

இனத்தின் உடன்கூட
இனக்கம் இல்லா சுனக்கம்.
யாவரும் கேலி செய்யமாட்டாரோ..-
’யாவரும் கேளிர்’ என பாடியவரை.

சொந்தங்களே.. உங்களுக்கு
என்ன ஆயிற்று.