Friday, 6 September 2013

கடவுளே...

கடவுளே...
எங்களை உந்தன் கண்ணுக்கு
தெரியவில்லையா- இல்லை
உமக்கு கண்ணே தெரியவில்லையா?.

எங்களின் மொழிதான்
புரியவில்லையா- இல்லை
எந்த ஒலியுமே எட்டாத
இயங்கா செவியா உமக்கு?.

திட்டினால்தான் வாயை
திறப்பாயோ-
தட்டினால்தான் கதவை
திறப்பாயோ?
நீ என்ன கடவுள் தானே,-
அற்ப மனிதன் அல்லவே?.

உலகம் இயங்கதானே உயிர்கள்-
உயிர்கள் வாழத்தானே பயிர்கள்?.

மறுபிறப்பு என்று ஒன்றிருந்தால்..
என்னை கடவுளாக பிறக்க வை.
நல்ல கடவுளாக நானிருந்து
நல்ல மனிதர்களை
நான் காக்கின்றேன்.
நீர்  சற்று ஓய்வு எடுத்துக்கொள்ளும்.