காதல் மொழி
நெஞ்சமெனும் வெள்ளத்தில்
நீந்திடும் அன்னமே
எந்தன் உள்ளத்தை வாட்டுது
உந்தன் எண்ணமே.
காணாத உருவத்தில்
உந்தன் முகம்தான் தெரியுதே
கேட்காத அரவத்தில்
உந்தன் குரல்தான் கேட்குதே.
ஆலமர கிளையிலே
இரட்டை கிளி பேசுதே - அந்த
காதல் மொழி கேட்டுத்தான் -இந்த
ஒற்றை மனம் வாடுதே.
என் கனவுகள் யாவையும்
உன் நினைவுதான் ஆளுதே
என் நினைவுகள் யாவிலும்
உன் கனவுதான் வாழுதேநின் திருமுகம் காணவே
தவம் தான் இருக்கின்றேன்
நின் தேன் மொழி கேட்கவே
சவம் போல் வருகின்றேன்.
உள்ளத்தை உரைத்திடவே
தேடி உனை வருகின்றேன்
தேவி முகம் கண்டவுடன்
ஊமையாகி போகின்றேன்.
நெஞ்சமெனும் வெள்ளத்தில்
நீந்திடும் அன்னமே
எந்தன் உள்ளத்தை வாட்டுது
உந்தன் எண்ணமே.
எந்தன் உள்ளத்தை வாட்டுது
உந்தன் எண்ணமே.
