Sunday, 23 February 2014


தப்பு

திருந்தாமல் சாவதும்
சாகும் போது திருந்துவதும்
இரண்டும் ஒன்றுதானே.

தெரியாமல் செய்த
எந்த தப்புக்கும் மன்னிப்பு உண்டு.
தெரிந்தே செய்த தப்பை
மன்னிப்பவனை
மன்னிக்கலாமா.

சில தப்புக்கு காரணமே
மன்னிப்புதான்.
சில தப்புக்கு தண்டனையே
மன்னிப்புத்தான்.

சாவின் விளிம்பில் இருந்துகொண்டு
தப்புக்கு மன்னிப்பு
கோருபவனுக்கு
என்ன சொல்லிவிட முடியும்
’சரி  போய் சேர்’
 என்பதை தவிர.