காதல் வந்ததே...
சாதத்தில் கூட நாட்டமில்லை
சோகத்தில் கூட வாட்டமில்லை
உன்னை சிந்தித்த நேரத்திலிருந்து.
திண்ணையில் நின்று கொண்டு
தென்னையை பார்தால் கூட,
அதில் உன்னை பார்ப்பதாய்
காகிதத்தில் எழுதிவைத்து
அதை கவிதை என்கின்றேன்.
அழுக்கு சட்டை அணிந்து
ஊரையே வலம் வரும் நான்,
இப்போது, வாசலில் நிற்பதென்றாலும்
சலவை சட்டைதான்.
விடியல் பொழுதையே காணாத நான்,
இப்போது, நீ கோலமிடுமுன்
வாரி சுருட்டி எழுகின்றேன்.
மண் மீது ஆசையில்லை
பொன் மீது ஆசையில்லை
உன் மீது ஆசை கொண்டேன்..
ஆம்...பிதற்றுகின்றேன்.
கடப்பாரையாலும்
அசைக்க முடியாத
என் இதயத்தை,- வெறும் உன்
கடைபார்வையால் அசைத்துவிட்டாய்!.
