Thursday, 30 August 2012

சொல்லாமலே..

உரைப்பதற்க்கு முடியவில்லை,
மனதை
மறைப்பதற்க்கு  தெரியவில்லை.

சம்மணம் கட்டிக்கொண்டு,
நீ அமர்ந்திருக்கும்
எம்மனம்,
மறைப்பதிற்கில்லா
அம்மணம்.

எமக்கு
மானத்தை மறைப்பதற்குத்தான்
தேவையேயன்றி,
மனதை மறைப்பதற்க்கு அல்ல  -
கோவணம்.

மனதை காட்டுவதற்க்கு
ஆவணம்
என்பது அவமானம்.

கண் கண்டாலே
என் நெஞ்சரியும்.

உணர்வுகள் உணர்ந்து
கொள்ளபட   வேண்டும்
சொல்லாமலே...

உள்ளங்கள் ஒன்றுபட
வேண்டும்
தன்னாலேயே..

உரைக்கவும் மாட்டேன்
மனதை
மறைக்கவும்  மாட்டேன்.