Tuesday, 7 August 2012


உழவனின்  நிலை 

ஏர பூட்டி சேர சேத்து,
சேத்துகுள்ள நாத்த நட்டு,
நாத்துகுள்ள உயிரை வைத்து, 
பாத்து  பாத்து பயிர் வளர்த்தோம். 
  
நாத்து  பட்டு போகாம ,
பயிர்  காத்தடித்து சாயாம,
கால நேரம் பாக்காம, 
எலி விரட்டி, வெட்டுகிளி விரட்டி
காத்து காத்து பயிர் வளர்த்தோம்.

பூச்சி பாத்து  மருந்தடிச்சு,
நேரம் பாத்து உரம்  போட்டு,
மரம் போல  பயிர் வளர்த்தோம்.
  
விளைந்த  பயிரை 
காய வைத்து,
காய்ந்த பின்னே  கதிர் அறுத்து,
அறுத்த பயிரை கதிரடிச்சு,
பதர் பிரிச்சு, நெல் பொறுக்கி-
அடுக்கி  வைத்தோம் மூட்டை  கட்டி.

அதை அத்தனையும்  யாருக்கோ
வண்டி  ஏத்தி 
அனுப்பி நின்னோம்  கையை கட்டி. 
---------------------------------------------------------
 உமிழ் நீர் விழுங்கியே,- எங்கள் 
 உயிர்  வளர்த்தோம்.
 கண்ணீர் விட்டே,-நாங்கள் 
 பயிர் வளர்த்தோம்.
 அதை  நன்றாய் தின்றே ,- நீங்கள் 
 வயிறு  வளர்த்தீர்.
 அழுது அழுது  உழுதவனுக்கோ...
 ஒரு முழம்   கயிறு தந்தீர்.