Tuesday, 16 October 2012


சாமியே நீயே சொல்லு

வாழ பிடிக்காதவனுக்கு
சாக வழியிருக்கு,
சாக பிடிக்காதவனுக்கு
வாழ வழியிருக்கா? -
சாமியே நீயே சொல்லு.

விரும்பி பிறக்கவில்லை
என்றாலும் வாழ்கின்றோம்,
விரும்பி சாகவில்லை
என்றாலும்  சாகின்றோம்.

ஆனால்..
வாழ்ந்து முடிந்தபின் சாவதா
அன்றி
வாழமுடியாமல் சாவதா?  -
சாமியே நீயே சொல்லு.

காற்றும் நீரும், செடியும் பயிரும்,
நிறைந்த பூமி  வாழத்தானே? -
அன்றி
சாக புதைக்கவா? -
சாமியே நீயே சொல்லு.

வாழ நிலமில்லாமல், வாழ வழியில்லாமல்
இந்த அகண்ட பூமியிலே பிறப்பெதற்கு?-
சாமியே  நீ எதுவுமே சொல்ல வேண்டாம்
படைப்பதையே  நிறுத்து.

ஆயிரமாயிரம் கிரகங்கள் இருக்கு,
அதோடு பூமியும் இருந்து தொலைக்கட்டும்-
ஜீவராசியில்லா
மலட்டு கிரகமாய்.