ஒரு தீபாவளி முடிந்த பின்பு... சொன்னார்கள்
அம்மா சொன்னாள்
துணி கடையில் ஏக கூட்டமென்று
பாட்டி சொன்னாள்
பலகார கடையில் ஏக கூட்டமென்று
பொண்ணு சொன்னாள்
வளையல் கடையில் ஏக கூட்டமென்று
வெடி கடையில் ஏக கூட்டமென்று
தாத்தா சொன்னார்
பொடி கடையில் ஏக கூட்டமென்றுஆனால்...
அப்பா மட்டும் சொல்லவேயில்லை
வட்டி கடையிலும் ஏக கூட்டமென்று