Saturday, 28 July 2012


கைகள் இரண்டும்
பிணைந்தே  இருப்போம்.-
தோளின் மீது  கைகள்
போட்டே நடப்போம் .-
என்னை,- நீ தாங்கு,
உன்னை,- நான்  தாங்குகிறேன்.

அஞ்சாதே ...
கண் துஞ்சாதே ....

வீழ்ந்துவிடுவோம்  என்று
எண்ணியவர்கள்  எல்லாம்
வியந்து போகவேண்டும்.

மானம்தான் பெரிது.-
வேட்டியை இறுக்கி கட்டு.-
புறப்படு ...

இன்றாவது,
சாக்கடைக்குள் வீழ்ந்துவிடாமல்
வீட்டுக்குச்செல்வோம் .

....போதை நண்பர்கள் .