கைகள் இரண்டும்
பிணைந்தே இருப்போம்.-
தோளின் மீது கைகள்
போட்டே நடப்போம் .-
என்னை,- நீ தாங்கு,
உன்னை,- நான் தாங்குகிறேன்.
அஞ்சாதே ...
கண் துஞ்சாதே ....
வீழ்ந்துவிடுவோம் என்று
எண்ணியவர்கள் எல்லாம்
வியந்து போகவேண்டும்.
மானம்தான் பெரிது.-
வேட்டியை இறுக்கி கட்டு.-
புறப்படு ...
இன்றாவது,
சாக்கடைக்குள் வீழ்ந்துவிடாமல்
வீட்டுக்குச்செல்வோம் .
....போதை நண்பர்கள் .